திங்கள், 25 பிப்ரவரி, 2013
திங்கள், 11 பிப்ரவரி, 2013
சமூகப் பிரச்சினைகள் பற்றி இன்றைய இளைஞர்களின் மனநிலை!!!!!
நேற்று நீயா? நானா? தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்த போது சமூகப் பிரச்சினைகள் பற்றி இன்றைய இளைஞர்களின் மனநிலை மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. யாருக்கும் இன்றைய தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. எந்த பிரச்சினைகளுக்கு ஊடகம் முக்கியத்துவம் கொடுத்து உணர்வுபூர்வமாக மக்களை தன பக்கம் இழுத்து வைத்து இருக்கிறதோ அந்தபிரசினைகள் பற்றி மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகள் பற்றியோ, அரசியல் பற்றியோ துளியும் அக்கறை இல்லை இவர்களுக்கு. இவர்கள் அனைவருமே வெறும் ரசிகர்களாக,கருத்து கூறுபவர்களாகவே உள்ளனர். அந்தக் காலத்தைப் போன்று இல்லை இப்போது...இவர்களுக்கு தேவையான அனைத்துமே இணையத்தில் படித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது..ஆனாலும் இவர்கள் இப்படி அசட்டையாக இருப்பதற்கு காரணம் நம்மைப் போன்ற பெற்றோர்களும், எதற்குமே உபயோகம் இல்லாத இந்த கல்விமுறையும் தான். இப்படி மொக்கையாக இருப்பவர்களால் இன்றைய முதலாளி வர்க்கங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெருத்த லாபம்.
இதனை மாற்ற நாம் பிள்ளைகளுக்கும் சமூகத்தின் மீதான அக்கறை வரவேண்டும் என நினைத்தால், தினமும் சிலமணி நேரமாவது அவர்களிடம் அரசியல் பற்றியோ,நடப்பு பிரச்சினைகள் பற்றியோ பேசவேண்டும்..அதுதான் வரும் சந்ததியினருக்கு நாம் செய்யும் நல்ல விஷயம் ஆகும்.
அல்லது
முகநூலில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் போன்றோர் தங்கள் நட்பு வட்டத்தில் இன்றைய இளைஞர்களையும் இணைப்பது மிகுந்த பயன் தரும். சமூகத்தைப் பற்றிய அக்கறையை இவர்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் தான் வருங்கால இந்தியாவை நாம் நினைத்த தடத்தில் வழிநடத்திச் செல்ல முடியும்..இல்லையெனில் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்!.
இதனை மாற்ற நாம் பிள்ளைகளுக்கும் சமூகத்தின் மீதான அக்கறை வரவேண்டும் என நினைத்தால், தினமும் சிலமணி நேரமாவது அவர்களிடம் அரசியல் பற்றியோ,நடப்பு பிரச்சினைகள் பற்றியோ பேசவேண்டும்..அதுதான் வரும் சந்ததியினருக்கு நாம் செய்யும் நல்ல விஷயம் ஆகும்.
அல்லது
முகநூலில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் போன்றோர் தங்கள் நட்பு வட்டத்தில் இன்றைய இளைஞர்களையும் இணைப்பது மிகுந்த பயன் தரும். சமூகத்தைப் பற்றிய அக்கறையை இவர்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் தான் வருங்கால இந்தியாவை நாம் நினைத்த தடத்தில் வழிநடத்திச் செல்ல முடியும்..இல்லையெனில் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்!.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)