ஜப்பானில் மீன் உணவு மிகப் பிரசித்தம்.அதனால் மீன்சந்தை நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்தது.ஒரு சமயம்,ஜப்பானை ஒட்டிய கடல் பகுதியில் மீன்வளம் குறைய ஆரம்பித்தது.மீனவர்களுக்கோ ஒரே கவலை! சரி, மோட்டார் படகுகளில் வெகுதூரம் போய் மீன்களை பிடித்து வரலாம் என்று போனார்கள்.அப்பாடா!  நிறைய மீன்கள் கிடைத்தன. ஆனால் அவற்றை கொண்டு வந்து விற்பதற்குள் மீன்கள் வாடிவிடவே மீன்கள் தேங்கி விட்டன.
பின்னர் மீன்களை பிரெஷ் ஆக வைக்க ப்ரீசர் பெட்டிகளை பயன்படுத்தினார்கள்.அப்போதும் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை.
இறுதியாக ஒரு ஐடியா செய்தார்கள். அது க்ளிக்காகி விட்டது.மீன்வியாபாரம்  ஓஹோ! 
எப்படித்தான் சமாளிச்சாங்க அந்த சவாலை?மீன்தொட்டிகளில் சுறாக் குட்டிகளை போட்டு கொண்டு வருகிறார்கள்.அந்த சுறாக் குட்டிகளிடமிருந்து இதர மீன்கள் தப்பிபதற்காக தொடர்ந்து நீந்திக் கொண்டே இருக்குமாம்.அதனால் புத்துணர்ச்சியுடன் அந்த மீன்கள் இருந்தனவாம்.
நாமும் அப்படித்தான்.எப்போதுமே வேலையும், டி,வி..ரிமோட்டுமாக நமது வாழ்க்கையின் பெரும்பகுதி இருப்பதால்,அலுப்பாகவும்,மந்தமாகவும் கழிகிறது.அவ்வபோது வரும் பண்டிகைகள்  நம்மை  உற்சாகபடுத்துகின்றன   என்றாலும் அதுவும் சில மணித்துளிகள் தான்.மற்றபடி சவால்கள் தான் நம்மை எப்போதும் சுறுப்பாகவும்,உத்வேகத்துடனும் வைத்து இருக்கின்றன. அதற்காக பிரச்சினைகளைத்  தேடி போகவேண்டாம். நம்மிடம் உள்ள ஆற்றல்,தனித்திறமை,உழைப்பு இவை வெளிப்பட்டால் தான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு ஜெயிக்க முடியும்.அது எப்போது சாத்தியம்?தனித்து நின்று சவால்களை எதிர்கொள்ளும்போது  மட்டுமே!
நமக்கு ஒரு சுறாகுட்டி தேவை.சவால் என்கிற பெயரில்.....அப்போதுதான் தெரியும் நம்மால் எவ்வளவு தூரம் தம் கட்டி நீந்த முடியும் என்று!
இனி வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை வந்தால் கண்ணை கசக்கிக்கொண்டு உட்காராமல்,"welcome my dear  சுறாகுட்டி" என்று தைரியமாக வரவேற்போம்.
அது நம்மை,நம் நிஜங்களை நமக்கும்,ஊராருக்கும் அடையாளம்  காட்டும்.