ஞாயிறு, 14 ஜூலை, 2013

இயல்பாக பேசிபழகி வரும் அன்பை விட (நேசிப்பவரிடம்) சண்டையிட்டு சண்டையிட்டு வளர்க்கப்படும் அன்பு சாகா வரம் பெறுகிறது ...!!

பனி பூத்த சிறு மேகம் நின் திரு மேனி உரசும். அது கண்டு நுனி பூத்த சிறு பூக்கள் சில் குளிர் காற்றில் ஆடும்.

பாதையில் துணையானோம்
பாதியிலே தூரமாகிறோம்...
உறவுகளை சுகமாக்கவே
நம் உணர்வுகளை சோகமாக்குகிறோம்....
சோகமான இந்த முடிவும் சுகமாகும் வரை ....

பிரியாத மனசோடு காத்திருப்போம்...

காலம் வரும் வரையிலே...

 

தீர்ந்துவிட்டது உன் மீதான கோபம்
தேடிக் கொண்டிருக்கிறேன்
விரட்டிவிட்ட தூதுப்புறாவை




பொழிந்த வெண் பனியில் பூத்த புது நிறப் பூவிற்கு என்ன பெயர் வைப்பது ? மனசு கிளறிப் போ மாமழையே !

இரவுக் காட்டில் சாரல் மின்மினிகள் மின்னுகின்றன.

மழையில் குளித்தெழுந்த பூக்களின் சிரிப்பில் இன்றைய பொழுது விடிந்தது... உலகம் அழகாய் இருக்கிறது...

மழையோடு
மழையாக வேணும்.
மழையாகி
ஊர்சுத்த வேணும் .
இலையினையும்பூவினையும்
முத்தமிட வேணும்.
காற்றோடு
கதை பேசித்
திரிய வேணும்.
சில்லென்று
சிலிர்த்தாடி
மகிழ வேணும்.
அலையேறிக்
கடல் உலவி
மீனோடு
நீந்த வேணும்.
குழந்தை
பேசும்
குலவு மொழியில்
கிளியோடு
கொஞ்ச வேணும்.
உதிரும்
இலையாகி
ஆற்றோடு
போக வேணும்.

பச்சை வனத்தில் மோகம்
மெய் சூட
கலந்து கிடந்தது
மண்ணும் விதையும்.

மென்தளிர்
இலையாடைகள்
மெல்ல நழுவ
பெரு மரத்திடம்
காதலுடன்
பேசிக் கொண்டிருந்தது
காட்டுக் கொடி.

சலனக் குளத்தில்
நீர்ப் பூக்களின்
அதர மகரந்தங்களை
முத்தமிட்டுக் கொண்டிருந்தது
பொன் தும்பி.

விரல்கள்  கோர்த்தபடி
நீல வான மெத்தையில்
கூடல் மொழி பேசி
மௌனித்திருந்த
குளிர் காற்றும் மழை மேகமும்
சட்டெனத்  தழுவிக் கொள்ள
பொழிந்த பேரன்பில்
மஞ்ஞைப் பீலிகள் உதிர்ந்த
காடெங்கும் ததும்புகிறது
காமம்.

இரவின் வானில்
உனை விட்டுப்பறந்த
விருப்பத்தின் சிறகுகள்
அதிகாலைக் கிளையில்
எனை வந்தடைந்து
சொல்லத்துவங்கின
நிறைவேறியும் நிறைவேறாத
விருப்பங்கள் குறித்து.


அது நிகழ்ந்த பொழுது

பூக்களின் வாசனை

எங்கும் நிறைந்திருந்தது

காற்றின் இசைக்கு

இலைகள் பாடிக் கொண்டிருந்தன...

சட்டென்று அது நிகழ்ந்தது.

முகம் மறைத்து

பெண்கள் இடம் நகர்ந்தனர்

இயல்பாய் நடந்தவர்

கலவரத்துடன் விரைந்தனர்

மகிழ்ச்சி வெறுப்பு கோபம் என

ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை

அங்கே விட்டுச் சென்றனர்...

என் உதடுகளை முத்தமிடத் தொடங்கிய மழை

இப்பொழுது முழுவதுமாக

என்னை ஆக்கிரமித்துக்கொண்டது...


வண்ணச் சிறகு மலர்த்தி வசந்தங்கள் பாடிப் போகும் குருவியின் காற்றளையும் சிறு தொண்டை இசையூறுங் கிணறோ?


சிட்டுக்குருவியின் இசை எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை. மயங்கிச் சரிந்து அதன் அருகில் விழுந்தால் அது பறந்தே விட்டது... அது விட்டுச் சென்ற இசையோ இப்போது என் இதயத்துள் .


இறுக்கமாய்
இருப்பவன்
இரும்பெனவேப்
பேர்வாங்கி
இறக்கிறான்
துருப்பிடித்து .

என் வார்த்தைக்கு விளக்கம்
கேட்பவர்கள் மத்தயில்.......
என் மௌனத்தை
மொழி பெயர்க்க
தெரிந்தவன் நீயடா..................


உன் மௌனத்தில்
உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தில் உள்ள
அன்பையும் யாரால்
உணர முடிகிறதோ
அவர்கள் தான் உனக்காக படைக்கபட்டவர்கள் ............


ஞாபகங்கள் அழிக்கபடுவதிலை
பிரிந்த பின் தான் ஆழமாக
பதிக்கப்படுகின்றன...!

டாக்டர் : .நம்ம ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல Punch Dialogue சொல்லு ...?
நர்ஸ் : "கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு போங்க "


இன்பத்திலும் துன்பத்திலும்
மனம் விட்டு பேச
துணை இல்லாத போதுதான்
தெரியும்
உண்மையான அன்பின் அருமை...!

எழுதிப் பார்த்து
வாங்குகிற
பேனாப் போல
எழுதிப் பார்க்கிறது
எதையோ நம் மீது
இந்த வாழ்க்கை


குழந்தை வரம் வேண்டி
பல கோயில்களுக்கு செல்லும்
"நிறைய" பெண்களுக்கு தெரிவதில்லை
அம்மா வரம் வேண்டி நிற்கும்
அனாதை குழந்தைகளை.



என்னுடன் எவ்வளவு
சண்டையும் போட்டுக்கொள்ளலாம்.
எவ்வளவு கோபமும் பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் சமாதானம் ஆகும் போது அணைத்துக்கொள் அது போதும்


மயங்கும் காலை பொழுதினில் ..
வீசும் தென்றலாய் ..
என் மனதில் மோதுகிறாய் ..
சில்லென்ற உன் சுவாசத்தில் ..
உறைந்து போகிறேன் ..
காலைப் பனியாய் ..
உன்னைத் தழுவி ..!

உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே ..
அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது ...!!

இன்னும் 5 ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் வறண்டு போய் விடுமாம்... அதிர்ச்சி தகவல்

டெல்லி:
வறண்ட நகரமாகி வரும் சென்னையின் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நீரினால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்துவருவதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐதராபாத் நகரமும், சென்னையும் வறண்ட நகரங்களாகிவருகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நகரங்களின் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்குப் போய்விடும். நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுவதால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் இதனால் நோய் பரப்பும் தன்மை அதிகரித்துள்ளது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஆராய்ச்சி நிறுவனம். இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.