சனி, 24 செப்டம்பர், 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

நான் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் சில குழந்தைகள் குறைவான கற்கும் திறனும்,மந்த புத்தியுமாக இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இன்னொரு பெண்குழந்தையோ வளர்ச்சியின்றி, ஒரு வயது குழந்தைக்குரிய உயரத்தில் இருக்கிறாள். இதற்கு பெரும்பாலும் காரணகர்த்தாக்கள் யார் தெரியுமா?....பேரன் பேத்தி எடுத்த பின்னரும், மனைவி இறந்து போனதால் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று??????? கிராமத்துச் சூழலில், வறுமையில் வாடும் இளம் பெண்களை பணத்து ஆசை காட்டி திருமணம் செய்து, பிள்ளைகளை வேறு பெற்றுக் கொள்கிறார்கள் இந்தக் கயவர்கள்!...இந்தக் கிழட்டு கதாநாயகர்கள் தங்கள் ஆண்மையின் பலத்தை நிரூபிக்க, பாவம் மூளை வளர்ச்சியின்றியும்,உடல் வளர்ச்சியின்றியும்,மந்த புத்தியுமாக பிறக்கும் அந்தக் குழந்தைகள் பலியாக வேண்டுமா என்ன???......

அதிலும் இன்னொரு கொடுமை என்னவென்றால், சம்பந்தப்பட்ட அந்த இளம் மனைவிக்கு இம்மாதிரி குறையுடன் பிறக்கும் இந்தக் குழந்தைகள் தான் வாரிசு!..அனால் அந்த கிழவருக்கோ, காலாகாலத்தில் திருமணம் நடந்து நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இருப்பர். என்ன ஒரு கொடுமை பாருங்கள்?.....ஒரு பக்கம் வயதுக்கேற்ற தேவைகள் எவ்வளவோ இருக்கும். இன்னொரு பக்கம் ஊனமாகப் பிறந்த குழந்தையினால் மன உளைச்சல் வேறு பாடாய்ப் படுத்தும். இந்தக் கொடுமையை சமுதாயம் அங்கீகரித்து கொள்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் கடுமையான தண்டனை கிடையாதா?....ம்ம்ம். நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக