
பயணம்!
தொடரும் பயணங்களில் மீண்டும் மீண்டும் சந்திக்க நேருகிறது
சில அபூர்வ தருணங்களை..நதிப் பாலங்களின் மீது ரயில் நின்று விடும்
தூரத்தில்
நீண்டு விரியும் நதியின் ஆழம்,...முன்னேறிச் செல்லும் பாதையில்
வேகமாக கடக்கும் மரங்கள்,
தாயின் தாலாட்டுக்குப் பிறகு
ரயிலின் தாலாட்டில் சுகமாய்
குழந்தையின் உறக்கம்,
தூரத்தில் விரியும் வயல்வெளியில்
நடனமாடும் மயிலின் தொகை,
இயல்பிலிருந்து விடுபடு இதைபோல
ஆச்சரியங்களை அடிக்கடி சுமந்தபடி.-சியாமளா
வேகமாக கடக்கும் மரங்கள்,
தாயின் தாலாட்டுக்குப் பிறகு
ரயிலின் தாலாட்டில் சுகமாய்
குழந்தையின் உறக்கம்,
தூரத்தில் விரியும் வயல்வெளியில்
நடனமாடும் மயிலின் தொகை,
இயல்பிலிருந்து விடுபடு இதைபோல
ஆச்சரியங்களை அடிக்கடி சுமந்தபடி.-சியாமளா
பெரு வாழ்வு!!!!
மழைச்சாரலின் அந்திநேரம்
மல்லிகை வாசம்
மயங்கிய மனது
எங்கோ மிதந்து வரும்
மனதுக்கு பிடித்த பாடல்
காதலின் கைப்பிடித்து
விடிய விடிய
கதைகள் பல பேசினேன்.....
சட்டென்று கலைந்தது கனவு.
விடிந்து விட்டது நினைவுக்கு வந்ததும்
சமையலறைக்குள் தாவியது மனசு
மறுபடியும் மறுபடியும்
வந்துகொண்டுதான் இருக்கின்றன
அதே கனவுகளைச் சுமந்த இரவுகள்.
அவளுக்கென்ன நன்றாகத்தான்
சீரும் சிறப்புமாக வாழ்கிறாள்
ஊர் சொன்னது! -சியாமளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக