மழைச்சாரலின் அந்திநேரம்
மல்லிகை வாசம்
மயங்கிய மனது
எங்கோ மிதந்து வரும்
மனதுக்கு பிடித்த பாடல்
காதலின் கைப்பிடித்து
விடிய விடிய
கதைகள் பல பேசினேன்.....
சட்டென்று கலைந்தது கனவு.
விடிந்து விட்டது நினைவுக்கு வந்ததும்
சமையலறைக்குள் தாவியது மனசு
மறுபடியும் மறுபடியும்
வந்துகொண்டுதான் இருக்கின்றன
அதே கனவுகளைச் சுமந்த இரவுகள்.
அவளுக்கென்ன நன்றாகத்தான்
சீரும் சிறப்புமாக வாழ்கிறாள்
ஊர் சொன்னது! -சியாமளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக