ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சந்தோஷமாக இருக்க வேண்டும்!!!!!

 
உண்மையில் நம் எல்லாருக்குள்ளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கிறது.  ஆனால் தங்க நகையைத் தேடி மளிகைக் கடைக்கு போவது போல் நாம் தவறான கதவுகளைத் தட்டி கொண்டு இருக்கிறோம். அதனால் தான் சலிப்பு,வெறுப்பு,கோபம் எல்லாமே!!!  அலிபாபாவின் குகைக்குள் இருக்கும் புதையல்கள் போல சந்தோஷம் நமக்குள் தான் ஒளிந்து இருக்கின்றன.அதற்கான ஏழு சூத்திரங்கள்...
 சந்தோஷத்தை முதலில் கண்டுபிடியுங்கள்...அபோதுதான் அதை அடைய முடியும்!
உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த விஷயங்கள் மகிழ்ச்சி தருகின்றன?அதை ஏன் நாம் அடைய முடியவில்லை என யோசித்தால், அப்போதே அதற்கான விடைகள் தெரிந்து விடும். அவற்றை நீங்களே தேடி அடைய பாருங்கள்!
நம் செயல்களுக்கு நாமே பொறுப்பேற்றுக் கொள்வோம்!
'எல்லாம் உன்னால தான்! ' என்று சாட் சற்றென்று நாம் மற்றவர்களை குறை சொல்வதுண்டு.
அல்லது யாரவது ஏதாவது சொன்னால் அதை முரட்டுத்தனமாக மறுப்பது. நான் பிடிச்ச முயலுக்கு மூனே கால் என்பது. விஷயத்தை வேண்டுமென்றே சிக்கலாகி விடுவது.  இவை மூலம் உங்களுக்கு சந்தோஷம் கிடைத்ததா? பதிலுக்கு தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பதன் மூலம் பாசிடிவாக செயல்பட்டு இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என யோசித்து பாருங்கள்.
பாசிடிவாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை!
வாழ்க்கை பற்றிய பயன்களைப் பட்டியலிட்டு அதை எப்படி ஹாண்டில் செய்வது என்று யோசித்தாலே சந்தோஷத்துக்கான சாவி கிடைத்து விடும்.
இடத்துக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்வது!
'வைராக்கியமாக இருக்கிறேன்!' என்று சிலர் உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு கூட உறவுகளை வெறுத்து ஒதுக்கி விட்டு இருப்பார்கள்.இது வெறும் பிடிவாதம்.  பிடிவாதங்கள் என்றும் ஜெயிப்பதில்லை.அது காயங்களையும், வெறுப்புகளையும் மட்டுமே ஏற்படுத்தி விடுகின்றன.
கொண்டாடுங்கள்!
பார்க்கும் அழகான விஷயங்களை ரசித்துக் கொண்டாடுங்கள். அது மழையின் சத்தமாக இருந்தாலும் சரி, குழந்தையின் மழலையாக இருந்தாலும் சரி கொண்டாடுங்கள்.
நம் உணர்வுக்கு நாம் உண்மையாக இருப்பது!
ஊரெல்லாம் சொல்கிறார்கள் என்று நம் ஒரு சில விஷயங்களை செய்து கொண்டு இருப்போம். உதாரணமாக வேலை பார்க்கும் பெண்கள் தான் தைரியசாலிகள் என்ற பிம்பம் பொதுவாக காணப்படுகிறது.  அனல் தெரிந்த பெண் ஒருவர் தன குழந்தையை சரியாக வளர்க்க வேண்டும் என்று தன் வேலையை உதறினார். தனக்குள்ளிருக்கும் தன்னை அவர் அடையாளம் கண்டு கொண்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இந்த சூத்திரங்களை நீங்கள் கடைப் பிடித்து பாருங்கள்..உங்களுக்குள் இருக்கும் சந்தோஷப் புதையலை நீங்கள் அடைவது உறுதி!.

1 கருத்து:

  1. அருமையான சூத்திரங்கள். கடைபிடிப்பது கொஞ்சம் சிரமம் தான். முயற்சித்து கடைபிடித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு