செவ்வாய், 18 ஜனவரி, 2011

நான் ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வர்ட் !!!!!!!!

" எதுவா  இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லிடுவேன்...எனக்கு ஒளிச்சு மறைச்சு எல்லாம் பேசத் தெரியாது. நான் ரொம்ப ஸ்ட்ரெயிட்  பார்வர்ட். என்னை மாதிரி எதையும் நேரடியாக பேசுபவர்கள்....ரொம்ப உண்மையானவர்களாக இருப்பார்கள், அவர்களிடம் ஒரு நாணயம் இருக்கும்.எனவே மனசுக்கு பட்டத பட்டுன்னு சொல்லிடுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன்!"
இப்படி பலர் 'அந்தக் குணத்தை ஒரு ஸ்டேடஸ்  சிம்பலாக அதாவது தனது தனிச் சிறப்பை வெளிக்காட்டும் குறியீடாக வைத்து இருக்கிறார்கள்' என ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது.
மெனக்கெட்டு ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆக நடந்து கொள்வதால், நம்மை அறியாமல் எத்தனை பேரைக் காயப்படுத்தி இருக்கிறோம்? எத்தனை நட்புகளை இழந்து இருக்கிறோம்? எத்தனை உறவுகளைத் தொலைத்து இருக்கிறோம்? எவ்வளவு இதயங்களை தூரத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கிறோம்? கொஞ்சம் யோசித்தால் இந்த வேஷம் எதையும் தரவில்லை என்பது விளங்கும்.
ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆக இருத்தல் என்பது எதையும் வெளிப்படையாக பேசுதல் என்று பார்க்கப் பட வேண்டிய விஷயம் அல்ல.தடைகள் இன்றி ஒரு விஷயத்தை நேரடியாக சிந்திப்பதும், செயல்படுத்துவதும் தான் அதன் உண்மையான அர்த்தம். 
வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் சிந்திப்பது சிரமம். பேசுவது எளிது.எது எளிதோ அதைச் செய்துவிட்டு அதைத் தனது சிறப்புக் குணம் என்று பெருமை பேசிக்கொள்வது அர்த்தம் அற்றது.
உங்களுக்கு மற்றவர்களிடம்  'அவர் ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆன ஆளு,அவர் சரியாகத்தான் சொல்வார்' என்றெல்லாம் அங்கீகாரம் கிடைக்காது. நீங்கள் சொல்கிற கருத்துதான் உங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். நீங்கள் யார் என்று விளம்பரம் செய்வதில் அந்த இடம்  கிடைக்காது.
எனவே இங்கே சொல்லப்பட்ட விஷயங்கள் பட்டவர்த்தனமாக பேசுகிறவர்களுக்கு எதிரானது அல்ல.அப்படிப் பேசுவதை ஒரு குறியீடாக நம்பி, மெனக்கெட்டு தன் குணாம்சத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பதே இதன் நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக