புதன், 5 ஜனவரி, 2011

எதுவும் மந்திரமில்லை...

'மூலிகைகள் நல்ல  விளைவுகளுக்கு பயன்படுத்தப்படுரதப்  போலவே தீய விளைவுகளுக்கும் பயன்படுத்தபடுகின்றன என்கிறார் ஹெர்பல் கிளினிக் நடத்தும் முகுந்தன். 'மந்திரம் மாந்த்ரீகம்னு' சிலர் உட்கார்ந்துகிட்டு, தவறான மூலிகைகளை பயன்படுத்தி உடல் நோய், சரும நோய், வசியம்னு பல பிரச்சினைகளை உண்டு பண்ணிடுவாங்க. மயக்கமூட்ட, சிலவகையான உடல்நலக் கோளாறுகளை உண்டாக்க இவ்வகை மூலிகைகளால் முடியும். பாதிக்கப்பட்டவங்க, குறிப்பா பெண்கள், 'செய்வினை வச்சுடாங்க, 'தகடு வச்சுட்டாங்க', ன்னு  அழுவார்கள். இதனைப் போக்கி மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த இவர் தீய வழியில் பயன்படுத்தப்படும் மூலிகைகளை ஆராய்ச்சி செய்து வருகிறார்.
இத்தகைய மாந்த்ரீகம் பண்ணுபவர்கள், பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டுட்டு கடைசியா ஒரு பொட்டலத்தில் ஏதோ ஒன்றைத் தருவான். அது வேறொன்றுமில்லை..சாட்சாத் மூலிகைத் தயாரிப்புத்தான்...அது விஷத்தன்மையுள்ள தாவரங்கள் ஆகும்.அதனை பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணி ...யாரை முடக்கணுமோ, அந்த நபருக்கு நெருங்கிய மனுஷங்க மூலமா இதை எல்லாம் உணவுல கலந்து கொடுக்க வச்சுருவாங்க. மூலிகையோட நச்சுத்தன்மை ரத்தத்துல கலந்து தன்னோட ஆட்டத்தை ஆரம்பிக்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மாதிரி சூத்திரதாரிகள், எதிர்மறை தாவரங்களோட  combination யும் தெரிஞ்சு வச்சு இருப்பாங்க.அதுதான் அவங்க பலமே...இப்படி மருந்து கொடுக்கப்பட்டவங்க இயல்புக்கு வினோதமா நடப்பதைத்தான்,'வசியம் வச்சுட்டாங்க'ன்னு சொல்றாங்க.இதெல்லாமே முழுக்க முழுக்க உடல் சார்ந்த விஷயமே தவிர, இதுல அமானுஷ்யமோ, தெய்வத்தன்மையோ  துளியும் கிடையாது.
பொதுவா பெண்கள் தான் இப்படி மந்திரம், மாந்த்ரீகம்னு நம்புறது. வீட்டுல யாருக்காவது இப்படி வினோத பிரச்சினை வந்தா, 'செய்வினை வச்சுடாங்க'ன்னு புலம்பறது தவறு.'அதைத் திருப்பி எடுக்கப் போறேன்னு கிளம்பறது அதை விட பெரியத் தவறு. காரணம் பெரும்பாலான மருந்துகள் ஜீரணமாகி ரத்தத்துல கலந்த பின்னர்தான், அதோட வேலையைக் காட்டும்.இதனை சரி செய்ய மாந்த்ரீகப் போர்வையில் இருக்கும் மூலிகை வில்லன்களைத் தேடித் போகும் போது, அதோட பாதிப்புகள் இன்னும் அதிகம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக