ஞாயிறு, 20 மார்ச், 2011

எனக்குப் பிடித்த பாடல் வரிகள்....
ஒரு கல், ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்
ஒரு சொல், சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும், திருநாள் நிகழும் சேதி வரும்

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தவறியதோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ...


வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும்
முகில் எடுத்து, முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்....

தங்கத்தை பூட்டி வைத்தாய், , வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு?

பாயும் புலியின் குணங்களை மட்டும் பார்வையில் வைத்தானே
பாழும் மனிதன் குணத்தை மட்டும் போர்வையில் மறைத்தானே

காதல் கடிதம் எழுதவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா, பேனா மையோ தீர்ந்திடும்...

உன் விழியால் பிறர் அழுதால் கண்ணீரும் ஆனந்தம்  ஆனந்தம்...

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ...

சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி ஒவ்வொரு நாளும்  ஏங்குகிறாய்

உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அணுவென உடைந்து சிதறினாய்...
உச்சரித்து நீயும் விலக  தத்தளித்து நானும் மருகஎன்ன செய்வேனோ... 

உப்புகல்லு கண்ணீருக்கு ஏக்கப்பட்டது  
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்த சொல்லு புத்திக்குள்ள மாட்டிகிட்டது நீ 
தப்பிசெல்ல  கூடாதுன்னு கேட்டுகிட்டது......
  கத்தியின்றி, ரத்தமின்றி காயப்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
மிச்சமின்றி, மீதமின்றி சேதப்பட்டவள், உன் நிழல் கொடுத்த தைரியத்தால் என்னை அறிகிறேன்....

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்...

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா ......
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா...

சுகமே நினைத்து சுயம்வரம் தேடி
சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி...

மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும்  வெறுக்கவும் இல்லை
எனை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்


அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடுதான் மேய்வது எப்பொழுது
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது....

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
......தேனில் வண்டு மூழ்கும் போது 
பாவம் என்று வந்தாள் மாது

கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது
மூங்கிலே தோள்களோ..தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது......

முகத்தை தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்
பாவை புருவத்தை வளைப்பது புது விதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்தி சென்றாள்
பாண்டியப் பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம்
பாவை இதழது சிவப்பெனும்  போது பாவம் பவளமும் ஜொலிப்பது எது??






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக