இரட்டைப் பிள்ளைகளில் ஒருவர் கெட்டவராக இருப்பார்.
ஹீரோ போலீசா இருந்தா,வேலையில் இருந்து நீக்கப்பட்டதும் தான் குற்றவாளியை கண்டு பிடிப்பார்.
ஹீரோயின் சேலையை வில்லன் பிடுங்கியதும் எங்கிருந்தாவது ஓடி வந்து தன்னுடைய சட்டையை கழட்டிக் கொடுப்பார்.உடனே அடுத்த சீனில் ஹீரோயின் அரைகுறை ட்ரெஸ்ஸில் ஆட இவரும் கூட ஆடுவார்.
ஹீரோவோ,ஹீரோயினோ கடைசி நேரத்தில்.. அதிலும் ரயில்வே ச்டசிஒனில் தான் ஒன்னு சேருவார்கள்.
ஹீரோ அடிவாங்கும் போது கூட முகத்தை சுழிக்க மாட்டார்.ஆனால் தாயோ கதாநாயகியோ காயத்தை துடைத்தால் வலியால் துடிப்பார்.
வெடிக்கப் போகும் வெடிகுண்டின் இரண்டு வயர்களில் எதை கட் பண்ணுகிறாரோ அதுதான் சரியாக இருக்கும்.
முந்தானைத் தலைப்பு நழுவியதும் ஹீரோவிடம் வெட்கப்படும் ஹீரோயின்,இந்தப் பக்கம் திரும்பி நம் எல்லாருக்கும் காட்டுவார்.
வில்லன் என்ன செய்தாலும் பொறுமையாக இருக்கும் ஹீரோ,தன் மனைவியின் தாலியோ,அல்லது தங்கச்சியின் கற்போ???பறிபோகபோகிறது என்றால்,அப்படியே ஆவேசமாகிவிடுவார்.
பார்ப்பவர்களுக்கு ஓவர் செண்டிமெண்ட் டச் கொடுக்கணுமா?உடனே கர்ப்பிணிப் பெண் கதறுவதைக் காட்டுவார்கள்.
ஹீரோக்கள் எல்லாரும் சமுதாயத்தை பற்றின அக்கறையோடு இருக்க,ஹீரோயின்கள் மட்டும் சிறுகுழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு,ஹீரோக்களை துரத்தி துரத்தி காதலித்துக் கொண்டு இருப்பார்கள்.
(வெறுப்பா இருக்கு...கொஞ்சம் திருந்துங்கப்பா..)
சரியாச் சொன்னீங்க.....
பதிலளிநீக்கு