புதன், 13 அக்டோபர், 2010

ரசித்தல்...

ரசித்தல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதி.ஆனால் நாமோ ரசித்தல் என்பதை கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கிறோம்.நம்முடைய ரசனைகள் எல்லாம் இயற்கைக்காட்சிகள்,மீன்தொட்டிக்குள் நீந்தும் வண்ணமீன்கள்,வேலைப்பாடுகளுடன் மாமனார் வீட்டில் வாங்கிக்கொடுத்த தேக்கு மரக்கட்டில்,உங்கள் காரின் பின் கண்ணாடியில் எழுதப்பட்ட 'catch me if u can' வாசகம்,உலக சினிமா DVD collections ,கிரிக்கெட்,என ஏற்பாட்டு  ரசனைகளாகவே இருக்கும்.
ரசிப்பதற்கு தகுதியான விஷயங்கள்,அதற்கான நேரம் என்று தனியே ஒரு பட்டியலோடு வாழ்ந்தால் நடை முறை வாழ்க்கையே ஒரு பெரிய வேலையைக் செய்வது போலத்தான் இருக்கும்.

அதிகாலையில் சிலர் வாக்கிங் கிளம்புமுன் காதில் வாக்மன் பொருத்தி இருப்பார்கள்.நடக்கிற களைப்பு தெரியாமல் இருக்கவும்,சுகமான பாடல்களை கேட்பதுமாக நேரத்தை செலவிடுவது நல்ல திட்டம்தான்.
ஆனால் காலையில் எழுந்து நடப்பது என்பதே சுகமானதுதானே? அப்புறம் என்ன காதில் வாக்மான்? களைப்பு தெரியாமல் இருக்கவா?
செய்கிற வேலையோடு இன்னபிற விஷயங்கள் ரசிப்புக்குரியன  அல்ல என்ற தீர்மானம்தான் காதில் வாக்மானாக தொங்குகிறது...
பகலில் நாம் கேட்டறியா பறவைகளின் பாடல்கள்,'goodmornig சார்!' நண்பர்களின் பாசப் புன்னகை,தந்தையைப் போலவே அதே  டி   ஷர்ட் ஐ போட்டுகொண்டு தந்தையின் ஸ்டைலில் வாக்கிங் போக முயற்சிக்கிற குட்டிப்பையனின் முயற்சி,மரங்களில் சரம் சரமாக பூத்து இருக்கும் அதிகாலைப்   பூக்கள்,புதிய சுவரொட்டிகள்,..இப்படி ரசித்து அனுபவிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் கிடைக்கும் போது,தேமே என்று மூச்சிரைக்க வாகிங் போவதால் மட்டும் என்ன பயன்?
இயற்கையை ரசிப்பதற்காக இரண்டு நாள் விடுமுறையை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கோ,கோடைகானலுக்கோ போவதுதான் நம்மில் பலரது ரசனையாக இருக்கிறது."நடைமுறை வாழ்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும்.பிறகு தனியாக ரசிக்க வேண்டும்!' - இதுதான் நம்மில் பெரும்பாலானோரின் திட்டம்.அதாவது இரண்டுமே வேலையாக இருக்கவேண்டும்.
அப்படி இல்லாமல் ரசிப்பதற்கு தகுதியான விஷயங்கள் என்று எதையும் பார்க்காமல் வாழ்க்கையை போகிற போக்கில் ரசிப்போமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக