செவ்வாய், 12 அக்டோபர், 2010

சுற்றுலா அனுபவம்!!!!

மனிதர்களாகிய எல்லாருக்குமே சுற்றுலா ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது.
ராக்கெட் தொழில்நுட்பத்தை  வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய பிறகு,நிருபர்களை சந்தித்தார் அப்துல்கலாம்.அப்போது, 'உங்களுக்கு எப்போது விமானங்கள்,ராக்கெட்டுகள்  மீது ஈர்ப்பு வந்தது ?' என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் -
'என்னுடைய பள்ளி வயதில் பறவைகளின் இயக்கம் பற்றிய பாடத்தை நடத்திய ஆசிரியர், வகுப்பறைக்கு உள்ளேயே அதை முடித்து விடாமல், அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்துக்கு அழைத்துக் சென்றார்.அங்கே பறவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவைகளின் இயக்கம் பற்றி சொல்ல   பிரமிப்பாகவும்,ஆச்சரியமாகவும் இருந்தது.அன்றிலிருந்து ஒரு விமானியாக வர வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது..ஆனால் அது கைகூடவில்லை.எனவே ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான துறையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். எல்லாவற்றுக்கும் முதல் விதை விழுந்தது எங்கள் ஆசிரியர் நேரடியாக பறவைகளைக் காட்டி பாடம் எடுத்ததுதான்."
எல்லாவற்றையுமே,புத்தகங்களிலும்,இணையதளத்திலும் படித்து விட முடியும்.ஆனால் நேரடி அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
அத்தகைய அனுபவம் மனிதர்களாகிய நம் எல்லாருக்குமே அவசியம் தான்.புதிதாக நம் ஒரு ஊரில் போய் இறங்கிய உடனே பல நாட்களாக நாம் அந்த ஊரைப்பற்றி கட்டி வைத்திருந்த கோட்டை பொலபொலவென இடிந்து விழுவதை நாம் உணர முடியும் - ஈகோ முதற்கொண்டு!
அதுதான் சுற்றுலா சொல்லித் தரும்  மிகப்பெரிய பாடம்.
அதற்காக சுற்றுலா என்றதுமே பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த வருடம் குலுமனாலி போனார்கள்,நமக்கு அந்த அளவு போவதற்கு வசதி இல்லை என்று அலுத்துக்கொள்ள வேண்டியதில்லை.நம் வசதிகேற்றபடி நமக்கு அருகிலேயே எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன.அங்கேயும் நாம் தெரிந்துகொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.
"குனியும் போது புத்தகம் படி..
நிமிரும்போதும் உலகம் படி.."
என்ற வைரமுத்துவின் வார்த்தைகளின் படி உலகத்தைப்  படிப்போமாக!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக