ஞாயிறு, 24 அக்டோபர், 2010

வெட்கம்!!!!!

'ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனமிங்கு அலைபாயுதே'
-பாட்டைக் கேட்கும் போதே நமக்கு அறிமுகமான எதாவது பெண்ணின் வெட்க முகம் நினைவில் வந்து விலகும். ஆம்...வெட்கத்தைப் பெண்களுடன் ஓட்டிப் பிறந்த குணமாகத்தான்  சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைய சினிமா வரை சித்தரித்துள்ளனர்.
'யானோக்குங் காலை   நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்'
- இது...'நான் உன்னைப் பார்க்க, நீ மண்ணைப்  பார்க்கிறாய். நான் விண்ணைப் பார்க்க, நீ என்னைப் பார்க்கிறாய்' என நாணம் சுமக்கும் பெண்ணைப் பற்றி வள்ளுவரின் பார்வை.
அன்னப் பட்சி தூது போன காலத்தில் இதெல்லாம் சரிதான். ஆனால் இந்தக் காலத்து lap -top பெண்களுக்கு இந்த வெட்கம் எந்த அளவுக்கு சூட் ஆகும்?
தன துணையான ஒரு ஆணிடம் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வெட்கம்  இயல்பானதுதான். ஆனால், பொது இடத்தில் பேச வெட்கம், புது ஆட்களுடன் பழக வெட்கம், என அந்த வெட்கம் மொத்த சமூகத்திடமும் ஏற்பட்டால், அது ஆரோக்கியமானது அல்ல. உண்மையைச் சொல்வதென்றால் அந்த வெட்கம், உங்களுக்குள் தேவை இல்லாத தாழ்வு மனப்பான்மையைத் தான் ஏற்படுத்தும்.
கதைக்கும் கவிதைக்கும் வெட்கம் அழகான கருப்பொருளாக இருக்கலாம். ஆனால், நிஜத்தில் உங்கள் வெட்கத்தைக் கொண்டாட இன்றைய சமூகத்துக்கு நேரமில்லை.நான்கு பேர் எதிரே,  'வணக்கம், ஐ   யாம் ஆர்த்தி'  என்று கம்பீரமாக எழுந்து வரும் பெண்ணுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், கடைசி பெஞ்சில் பதுங்கி உட்காரும் மாணவிக்கு கிடைப்பதில்லை. அளவுக்கு மீறி வெட்கம் காட்டும் பெண்களை இன்றைய இளைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ஆக...' ஹூம்...நான் பேசமாட்டேன்' என்று கால் கட்டை விரலில் கோலம் போடும் பெண்கள் revised  சிலபஸில்  இல்லை!
   'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை '  தான் பாரதி சொன்னதும்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக