வியாழன், 21 அக்டோபர், 2010

புதையாது காதல்!

இதயம் நுழைந்து
என்னைத் திருடும் வரை
துணிவோடுதானே இருந்தாய்..?
போகப் போக
பொருளாதார வீழ்ச்சி எனும்
புதைகுழியில் நீ வீழ்ந்த போது
நம் காதலையும் சேர்த்து
ஏன் புதைத்தாய்?
ஒவ்வொரு முறையும்
நான் மாறாத காதலெனும்
கயிறு கொண்டு
உன்னைத்
தூக்கும் போதெல்லாம்...
அவநம்பிக்கைச்  சகதியில்
நீயாகவே விழுகிறாய்!
விரக்தியும் சலிப்புமாய்
குழிக்குள் நீயும்...
மீட்டுவிடும் உறுதியோடு
வெளிப்புறத்தில் நானுமென
தொடர்கிறது
ஒரு போராட்டம்!    -----சிவாநிகா.

1 கருத்து: