திங்கள், 27 செப்டம்பர், 2010

தன்னம்பிக்கை...தலைக்கனம் அல்ல!

இன்று உலகின் புகழ் பெற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை கட்டி ஆள்கிறார்கள் பெண்கள்.நிமிர்ந்த நன்னடையும் ,நேர்கொண்ட பார்வையுமாக வளைய வருகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு சமுதாயம் குத்தும் முத்திரை "தலைக்கனம்" பிடித்தவள் என்று! ஏனிந்த குற்றச்சாட்டு?ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து தன் திறமையால் மட்டுமே இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ள பெண்களை நோக்கி குற்றச்சாட்டுக்களை வீசுவது நியாயமே இல்லை.ஒரு காலத்தில் பெண்கள் தங்களை உயர்த்திக்கொள்ள வழி தெரியாமல்,கூட்டுக்குள் நத்தையாக சுருங்கி கொண்டார்கள், மிகச்சிலரைத்தவிர..ஆனால் இப்போதுள்ள பெண்கள்
 தங்களை மதிக்காத உறவுகளையும்,சமூகத்தையும் துச்சமாக ஒதுக்குகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.இது புரியாமல்' பெண்ணின் மனம் ஆழம்','அதை அறிவது கடினம்' என்று கதை பேசிக்கொண்டு இருக்காமல் அவர்கள் பீலிங்க்ஸ்   ஐ புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு நாமும் மற்றவர்களைப் போல "அவ முன்ன மாதிரி இல்ல,சம்பாதிக்கிற திமிர்,யாரையும் மதிக்க மாட்டேங்கறா     "போன்ற குற்றச்சாட்டுக்களை வேலைப் பார்க்கும் பெண்ணின் மீது வீசுவதை தவிர்க்க வேண்டும்.
 இப்போதுள்ள தலைமுறையினர் தங்களைத் தாங்களே தட்டி,தட்டி முன்னுக்கு வந்துள்ளார்கள்.
எனவே அவர்களின் தன்னம்பிக்கையைத் தவறாக புரிந்து கொள்ளாமல்,அந்தப் பட்டாம்பூச்சிகளைத் தட்டிக் கொடுத்து ரசிப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக