வெள்ளி, 17 செப்டம்பர், 2010

எதற்கெடுத்தாலும் டூ வீலர் தான்!!!!

டூ வீலர் ஓட்டும்  இல்லத்தரசிகளே..வேலைக்கு போகும் பெண்களுக்கும்,கூட்டுகுடும்பத்தில் இருப்பவர்களுக்கும்  வேலைச்சுமை அதிகம் இருக்கும்.அவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை செய்து முடிக்க முடியாது என்று டூ வீலர் வைத்துகொள்ளலாம்,தப்பில்லை.ஆனால் தனிக்குடும்பமாக   இருக்கும் பெண்களுக்கு கணிசமான அளவு நேரம் கிடைக்கும்.எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும்,மதியம் லஞ்ச் கொடுப்பதற்கும்  என்று எதற்கு எடுத்தாலும் டூ வீலரை  பயன்படுத்தாதீர்கள்.அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பதாக  நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.  அது தவறு.அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்காது,மாறாக சோம்பேறித்தனத்தை    தான்  வளர்க்கும்.ரெண்டாவது பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து இருக்கும்  இந்த நேரத்தில் பணத்தின் அருமையை உணர்ந்தும்,எரிபொருள் சிக்கனத்தை நினைத்தும்,முடிந்தவரை நடக்க பழகுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக