செவ்வாய், 14 செப்டம்பர், 2010

நமக்குள்ளே இருக்கு குழந்தை உள்ளம்...

'அமைதியாக யோசித்துப்பாருங்கள்..நம் எல்லோர் மனதுக்குள்ளேயும் ஒரு குழந்தை நிச்சயமாக இருக்கும். ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்த குழந்தையை சிரிக்கவைக்கிறோம்?நொடிபொழுதும் ஓய்வில்லாமல் ஓடிகொண்டே இருக்கிறோம்.
பள்ளி,கல்லூரி நாட்களில் நாம் அனுபவித்த  தருணங்களை     மீண்டும்  வாழ்க்கையில் கொண்டு வர அடிக்கடி ஜாலி டூர் செல்லுங்கள்..நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்கிற நேரம் அது.
அதுவும் குடும்பங்களை  பொறுத்தவரை கணவனுக்கோ மனைவிக்கோ இல்லறத்தில் ஒரு சலிப்புத்தன்மை வரும்.ஓடி ஓடி உழைப்பதால் வரும் அலுப்பு.
எங்காவது பயணம் செய்து தங்க நேரிடும் போது,அந்த கணவனின் அன்பு அருகாமை,அதே போல மனைவியின் அன்பு,அக்கறையை கணவனும்  புரிந்து கொள்ள ஒரு நல்ல  வாய்ப்பு. அதுமட்டும் இன்றி அருகாமையில் இருக்கும் மற்ற ஊர்களுக்கு செல்லும் போது அந்த மக்களைப்பற்றியும்,அவர்கள் ஊர் பற்றியும் அறிய முடியும்.வேற்று மொழியினர் என்றால் அவர்களின் மீதுள்ள ஆர்வத்தால் அந்த மொழியையும் கற்றுக்கொள்ள ஆசை வரும்.எப்பொழுது  பார்த்தாலும் சீரியல் பார்த்துக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்காமல், அதே போல் கணவர்களும் பணம் சம்பாதிப்பதையே  குறிக்கோளாக கொள்ளாமல் உலகத்தின் இன்னொரு பக்கத்தினை அறிய முற்படுவோம்.அழகான இந்த உலகம் நமக்காக நிறைய ஆச்சரியங்களை வைத்துக்கொண்டு காத்து இருக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக