புதன், 29 செப்டம்பர், 2010

ரியாலிட்டி ஷோ !!!!!!

நமக்கு நிச்சயம்  பேச்சுரிமை வேண்டும், நம் பிரச்சினைகளைப் பகிரவும்,உரிமையைப் பெறவும் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.ஆனால் அதை யாரிடம்,எப்போது,எதற்காக,என்னென்ன பேசலாம் என்ற வரைமுறை உள்ளது.நம்மில் பலரும் இது தெரியாமல்,பயனில்லாத,சபை அறியாத வீண்  பேச்சை தொலைகாட்சிகளில் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
டி.வி மோகத்தால் தூண்டப்படும் இந்த அசட்டுத்தனத்தை,மீடியா காசாக்கிகொள்கிறது என்பதைத் தவிர இதில் வேறந்த பயனும் இல்லை.அதை விட நாம் வாய் மூடி மௌனமாய் இருப்பதே மேல்.
நம்மை காமெரா முன்னால் பேசத்தூண்டுவது எது?எப்படியாவது டி.வி  இல் தலை காட்டிரணும்  என்கிற அல்ப ஆசைதான். இதில் தப்பில்லைதான்.ஆனால் எடிட்டிங் சமயத்தில் நடப்பது என்ன?ஒரு மேடையும்,கையில் மைக்கும் கிடைத்த உடன் ஒரு உணர்ச்சி வேகத்தில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
"வாவ்!சூப்பர்!ஹேட்ஸ் ஆப்! " என்றெல்லாம் சுடச்சுட பாராட்டப்பட்டு,கைதட்டல்களும் கிடைத்ததும்,போதை மெல்ல ஏற ஆரம்பிக்கிறது.
"அப்புறம்...என்ன நடந்தது? ரியல்லி?  கமான்! ஓப்பனா பேசுங்க!"என்று உசுப்பல்கள் தொடரவும்,கட்டுப்பாட்டை இழந்து எமோசனல்  ஆகி , அடக்க முடியாமல் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள்.நிகழ்ச்சிக்கு முன்  சொல்ல  நினைத்தது ஒன்று! நிகழ்ச்சியிலே சொல்லி முடித்து ஒன்று!
இந்த நிகழ்ச்சியிலே  பங்கு கொண்டு பேசிய அனைவருக்குமே அக்கம்பக்கத்தினர்,உறவினர்,நண்பர்கள்,அலுவலக ஆட்கள் என நிறையப் பேர் இருக்க கூடும்.இந்த நிகழ்ச்சிக்குப் பின்  நம்மைப்  பற்றின அபிப்ராயம் அவர்களிடம் எப்படி இருக்கும்?
கதை அல்ல நிஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக