வயதின் சுருக்கங்களுக்குப் பின்னே
வாழ்வின் பெருக்கங்கள்
வாழ்ந்ததற்கு அடையாளமாக...
கவனித்துக்கொள்ள மட்டுமே நாங்கள்
கவனிக்கப்பட அல்ல,
வீசப்படும் வார்த்தைகளை
வலிக்காமல்
தழுவி எடுத்துகொள்ளப்
பழகிவிட்டோம்.
சுமந்து எம்மை மறுநாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்
தள்ளாடும் நாட்கள்!
முதிர்ந்ததும் உதிர்ந்து விடும்
மந்திரம் தெரியவில்லை.
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்
இங்கிதமும் தெரியவில்லை.
மனவலியின் அழத்தத்தில்
உடல் வலி மறக்கிறோம்.
உடல் வலியின் உக்கிரத்தில்
மனமிருப்பதையே மறக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக