புதன், 22 செப்டம்பர், 2010

சினிமாவில் கிழட்டு கதாநாயகர்களின் அட்டகாசம்!!!!!

திரைப்படம் என்பது அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்கப்படும் ஒரு பொழுது போக்கு மீடியா.ஆனால் அதிலும் ஆணாதிக்க சிந்தனை ஓங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
 பேத்தி வயதில் இருக்கும் இளம்பெண்களோடு டூயட் பாடும் கதாநாயகர்கள் தான் நடிகர் திலகம்,உலக மகா நாயகன்,புரட்சி கலைஞர்,என்றெல்லாம் விளிக்கபடுகிறார்கள்,
ஏன் விஜய்,சூர்யா,அஜீத் போன்றோர்கள் குஷ்பூ,அம்பிகா,ராதிகா இவர்களோடு ஜோடியாய் ஆடினால் நங்கள் மட்டும் பார்க்க மாட்டோம் என்றா சொல்கிறோம்?அட போங்கப்பா...

இவர்களைப் போன்றவர்களின் ஆணாதிக்க மனோபாவம் தான், மகள் வயதில் இருக்கும் பெண்ணிடமும்,தனக்கு கீழே கல்வி கற்கும் மாணவிகளிடமும் தவறு செய்யத் தூண்டுகோலாக அமைகிறது.
!”  செமகட்டை! சூப்பர் பிகர்! சரியான துண்டு! என்பன போன்ற சமூக வார்த்தைகளின் புழக்கத்திற்கு மூலகாரணம் தமிழ் சினிமா என்பதை நாம் எப்படி மறுத்துவிட முடியும்?
தமிழ்சினிமா பெண் உலகத்தை இத்தனை இழிவு செய்த பின்பும் அவர்களுக்கு எவ்விதமான கோபமும் ஏற்படவில்லை யென்பது ஏன்?
ஒருவகையில் பெண்கள் கூட இதை ஏற்றுக்கொள்கின்றார்களா? அல்லர் அவர்களின் உளவியல் என்பது ஆணாதிக்க சிந்தனைகளினால் திசை திருப்பப்பட்டிருக்கின்றதா?
சினிமா நமக்கு மெசேஜ் சொல்லும் மீடியா அல்ல என்று சிலர் கூறினாலும்,
உளவியல்படி எந்த ஒரு கருத்தும் திரும்ப திரும்ப அழுத்தமாக கூறப்படுமாயின், அது நம் மனதில் நிச்சயமாக பதியத்தான் செய்யும்.சினிமா வெறும் என்டர்டைன்மென்ட் என்று கூறினாலும் நம்மில் பெரும்பாலோனோரின் பொழுது போக்கு...மீடியாக்களும்,சினிமாவும் தானே?
எனவே இந்த சினிமாகாரர்கள் திருந்தாவிட்டாலும் நாமாவது நம் வருங்கால சந்ததியினருக்கு நல்லதை எடுத்துரைக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.ரெண்டுங்கெட்டான் வயதில் இருக்கும் நம் பிள்ளைகளிடம்,சினிமாவில் காட்டுவது எதுவும் நிஜம் அல்ல,ஆணோ,பெண்ணோ,  ஒத்த வயதில் புரிதலோடு இணைவதே நல்ல உறவுக்கு அடையாளம் என்று கூறுவோம்.
பணத்துக்கு ஆசைப்பட்டு உடல் தெரிய ஆட்டம் போடும் நடிகைகளை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் எடைபோடக் கூடாது என்று எடுத்துரைக்க வேண்டும்.ஒருசில பெண்களை இவ்வாறு மீடியாவில் காட்டுவதால் தான், நம் வீட்டு ஆண் குழந்தைகள்,   "பெண்கள் கேலிக்குரியவர்கள்,மனதில் வக்கிரமான ஆசை இருப்பதால்  தான் இவ்வாறு உடை அணிகின்றனர்...எனவே நாமும் ஏன் அவர்களை கேலியோ,கிண்டலோ பண்ணக்கூடாது" என்று தவறாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் கஷ்டங்கள்,அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது என்று புரிய வைப்பது நம் கடமையாகும். ஒரு தாய்  என்ற முறையில் நான் என் மகனுக்கு அவ்வாறு கற்றுத தருகிறேன்.
பெண்ணைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு மீடியா தவறாக சொல்லிகொடுக்கும் முன்பே நாம் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பது மேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக