வியாழன், 16 செப்டம்பர், 2010

தற்கொலை அந்த மணித்துளியின் முடிவல்ல...

2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயின்படி 14 வயதுக்குட்பட்ட 30௦ ஆண்குழந்தைகளும், 80 பெண்குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்..என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?
தற்கொலை என்பது , எங்கோ,யாருக்கோ நடக்கும் நிகழ்வு அல்ல.நம்மைச்சுற்றி இருக்கும் உயிர்கள் அப்படி முடிவெடுக்கலாம்.அல்லது முடிவெடுக்கத் தள்ளப்படலாம்.
எனவே பிள்ளைகளை பொக்கிஷமாக வளர்ப்பதை விட ...அவமானங்கள்,தோல்விகள்,பிரச்சினைகள் என்று எதையும் கடக்கும் மனப்பலத்துடன்   வளர்ப்பது நல்லது..இபோதுள்ள கலாச்சாரத்தின் படி பணம்,புகழ்,அழகு இவைதான் வெற்றி என்கிற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.அதை இன்றைய இளையதலைமுறையினரின் எண்ணத்தில்  இருந்து அகற்ற வேண்டியது பெற்றோர்களது பொறுப்பு  தான்.
நம்முடைய அன்பும் அரவணைப்பு மட்டும் கிடைத்தால் போதும்.அவர்கள் கேட்டதை எல்லாம் செய்வதுதான் அன்பு என்று எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கிகொடுத்தால் நாளைக்கு அவர்கள் ஒரு கஷ்டமான சூழலை சந்திக்கும் போது மனம் உடைந்து போவார்கள்.எனவே பிள்ளைகள் மனதில் நம்பிக்கையை வளருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக