வியாழன், 16 செப்டம்பர், 2010

வரதட்சணைச் சட்டத்தின் சில பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்!!!!

வரதட்சணைச்   சட்டத்தின் சில பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என  நாடாளுமன்றம் பரிந்துரைத்திருகிறது..இதில் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் நிறைய இருக்கிறது என்பது உண்மைதான்.சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவாகும் வழக்குகளில் 40 சதவீதம் உண்மையில்லை என்று தெரிகிறது.இது பெரும்பாலும் நடுத்தரக்குடும்பங்களில் மட்டுமே நடக்கிறது.ஆனால் எத்தனையோ ஏழைக்குடும்பங்களில்       வரதட்சணைக் கொடுமைகள் நடக்கத்தான் செய்கின்றன.இரண்டாவது பெரும்பாலான பெண்கள் ,கணவரையோ,அவரது குடும்பத்தினரையோ சிறைக்கு அனுப்பும் நோக்கத்துடன் வழக்கு தொடருவது இல்லை.தங்களுக்கும்,தங்கள் குழந்தைகளுக்கும்சட்ட ரீதியாக  கிடைக்க வேண்டிய சீர்போருள்கள்,நகைகள்,ஜீவனாம்சம் போன்றவற்றைத்தான் பெற விரும்புகிறார்கள்.எனவே இந்தச் சட்டம் இல்லையென்றால் பணிக்குப் போகாத பெண்களின் நிலை பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் கேள்விக்குரியதாகிவிடும்.
அதிலும் காவல்துறையினரால் குடும்ப வழக்குகள் புறக்கணிக்கபடுகின்றன   என்பதும் ஒரு கசப்பான உண்மை.என்னவாக இருந்தாலும் குடும்பத்தினரே உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்ள காவல்துறையினரால் நிர்ப்பந்திக்கப்  படுகின்றனர். தீர்த்து வைக்கவே முடியாத சில பிரச்சினைகளில் காவல்துறையினர் இப்படி மெத்தனமாக இருப்பதால்  தான் அது குடும்ப வன்முறையிலோ,கொலையிலோ போய் முடிகிறது.இப்போது பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினைகள் காரணமாகத்தான் நிகழ்கிறது.எனவே வரதட்சணைச் சட்டத்தில் திருத்தம் அவசியமற்றது.
எந்தச் சட்டமும்,குறிப்பாக தீண்டாமைகெதிரான சட்டம்,பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றவைக் கூடத்தான் தவறாக பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது.அதற்காக இவற்றை எல்லாம் நீக்கிவிட முடியுமா    என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக