புதன், 22 செப்டம்பர், 2010

நீதித்துறையின் அநீதி!!!!

ஒரு நாட்டின் அஸ்திவாரமே நீதித்துறை தான்.ஆனால் அந்த அஸ்திவாரமே ஆடிக்கிடக்கிறது.
1996 ஆம் ஆண்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை சேர்ந்த முகமது என்னும் பத்தாம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வை எழுதிவிட்டு விடுமுறைக்காக உறவினர் வீடிற்கு சென்றான்.அங்கு லஜ்பத் நகரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.அபோது அவனுக்கு வயது 15. தனது படிப்பையும்,வாலிபத்தையும் 14 வருடங்களாக தொலைத்த அந்த வாலிபனை,கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் 'நிரபராதி'என்று நீதி(!) மன்றம் தீர்பளித்துள்ளது.இடைப்பட்ட காலத்தில் அவன் கைதான அதிர்ச்சியில் அவனது தந்தை,அக்கா  இருவரும் இறந்து போனது சோகத்தின் உச்சம்.
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கபட்டு விடகூடாது' என்றெல்லாம் வக்கனையாக பேசும் அரசியல்வாதிகளே...நீதிமான்களே...ஒரு நிமிடம் யோசியுங்கள்.உங்களின் நீதி..ஆள் பலமும்,பணபலமும் இல்லாத அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கையில் மட்டுமே விளையாடிக்கொண்டு இருக்கிறதே...ஏன்?
அதே போல் தான் போபால் விஷவாயு கசிவு காரணமாக பல்லாயிரக்கணக்கான பலி கொண்ட வழக்கின் தீர்ப்பு வெறும் இரண்டாண்டு சிறைத்தண்டனையும்,கொஞ்சம் அபராதபணமும் தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக