வெள்ளி, 17 செப்டம்பர், 2010

இது பண்டிகைக் காலம்!!!!

அனைவரும் போனஸ் கிடைத்த கையோடு  ஷாப்பிங் செய்ய,பொருட்கள் வாங்க  என்று படுபிசியாக போகும் நேரம்...கடைகளில் வண்ண,வண்ண ஆடைகள்,நகைகள்,இன்னும் எல்லாவிதமான பொருட்களும் இழுக்கத்தான் செய்யும்.அதற்காக கண்ணை மூடிக்கொண்டு இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் வாங்கி குவித்துவிட்டு "ஆத்திரத்தில் காரியம்,நிதானத்தில் சங்கடம்"என்று பிற்பாடு நெளிய வேண்டுமா ?
பொருட்கள் வாங்குவதில் தேவை,வசதி,ஆடம்பரம்,என்று மூன்று வகையாக நிபுணர்கள் பிரித்து இருக்கிறார்கள்...இதில் தேவை என்பதை எவ்வளவு அழகாக முன்னிறுத்தி இருக்கிறார்கள்?
'இந்தப்பொருள் இல்லாமல் நம்மால் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்றால்,கண்டிப்பாக அதை வாங்கலாம்.முடியும் என்றால் தள்ளிபோடுங்கள்.அதை விடுத்து எல்லாவற்றையும் வாங்கி குவித்தால் பிறகு ஒவ்வொரு மாதமும் போகி தான் கொண்டாடனும்!!!!!
'மனைவி செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் சம்பாதிப்பவரே  சிறந்த கணவர்,கணவரின் வருமானத்துக்கு உள்ளாக     செலவு செய்பவரே சிறந்த மனைவி' என்பார்கள்!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக