வியாழன், 16 செப்டம்பர், 2010

பணத்தைக் கையாளும் முறை....

பொதுவாகவே பணத்தைச் சம்பாதிக்கச் சொல்லி  தரும் நம் சமூகம் ,அதைக் கையாளுவதுக் குறித்து தெளிவாகச் சொல்வது இல்லை.அப்பாவின் பணத்தை செலவழிப்பதில் இருக்கிற சுகமும்,தன பணத்தை செலவழிக்கிற சுதந்திரமும் வேறுவேறானவை.
முக்கியமாக இன்றைய மாணவச் சமுதாயத்தினருக்கு  வெளிநாட்டினரைப் போல படிக்கும் போதே பணி செய்யும் சூழல் அமைய வேண்டும்.பணத்துக்காக மட்டும் இன்றி, வாழ்க்கையைப் பற்றிய புரிதலுக்காகவும்,சமூகத்தின் யதார்த்தங்களை அணுகவும் சுயத்தை மேம்படுத்தவும் இது உதவும்.வெளிநாட்டினரின் எல்லா கலாசார முறையையும் பின்பற்றும் நமக்கு இதையும் நம் வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக