வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பெண்களின் சிறை அறைகள்!!!!

காலோடு தலை தெரியாமல் போர்வைக்குள் தஞ்சம் புகுந்த காலமெல்லாம் பெண்களுக்கு நீடித்தது இளமை வரைதானே??? 'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே...காலம் இதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே...' என்ற பத்மினியின் பழைய சினிமா பாடலின் படி குழந்தையாக இருந்தவரை மட்டுமே நம்மை தூங்க செய்தார்கள்.அதன் பின்..?
வாழ்க்கைப் பயணத்தில் பிரியமான விஷயங்களை இழப்பது இயல்பு.ஆனால், இப்படி இழந்த பட்டியல் ஆணுக்கானதை விட பெண்ணுக்கு எப்போதுமே மிக அதிகம்.தூக்கத்தை தொலைக்கிறோம்.தோழிகளை இழக்கிறோம்; அடையாளங்களை,ஆசைகளை,கனவுகளை,பிரியமானவற்றை,கவிதை எழுதுவதை,பாஸ்கட் பால் ஆடுவதை,சத்தம் போட்டு சிரிப்பதை என்று பல நூறு விஷயங்களை நடுவிலேயே விட்டு விட்ட எத்தனை,எத்தனைப் பெண்கள்????
விட்டு விடப் பெரிய காரணம்....நம் வீடுகளின் அக்கினி மொழியில் இருக்கும் சிறிய சமையல் அறைகள் தன.அரைப்பதும்,கரைப்பதும்,போதிப்பதும்,பொறிப்பதும்,வருப்பதும்,வடியபோடுவதும்,வேகவைத்து உரிப்பதுமாக திரும்ப திரும்ப நிகழும் சமையல் அரை வேலை,கையில் அள்ளிய நதி நீர் போல் நம் கண் முன்னே நம் வாழ்வின் நேரங்களை எல்லாம் நம்மிடமிருந்து  ஒழுகச் செய்து விடுகின்றன.
நல்ல வழியாக இந்த முப்பது ஆண்டுகளில் மிக்சி ,கிரைண்டர் ,குளிர்சாதனப் பெட்டி,காஸ் அடுப்பு என நம் சமையல் அறையில் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.ஆனாலும் மாறாதது பெண்களின் மூலையில் எல்லாப் பகுதிகளிலும் ஓடிக்கொண்டு இருக்கும் சமையல் செய்திகள்.
'சமையல் வேலைப் பகிர்வு என்பது குடும்பத்தின் ஒவ்வொரு  நபருக்குமான பொறுப்பு' என்ற உணர்வை உருவாக்குவது மட்டுமே பெண்ணின் மீது காலம் சுமத்திய இந்த கல்வாரிப் பயணத்தை எளிதாக்கும் வழி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக